கம்பஹா போன்று கொழும்பும் ஆபத்து. எச்சரிக்கின்றது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.

கம்பஹா போன்று
கொழும்பும் ஆபத்து. எச்சரிக்கின்றது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக கொழும்பு மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டம் போன்று கொழும்பு மாவட்டமும் அதிக ஆபத்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்குப் பத்தாயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“இதனைச் செய்வதற்குக் கொரோனா வைரஸ் சோதனை தொடர்பான கொள்கைகளைத் தரமுயர்த்த வேண்டும். சரியான சோதனைக் கொள்கைகளை அறிவிக்க வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.