09. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்

பகுதி 09

நான் டெல்லியிலிருந்து வந்திறங்கிய போது இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு கொந்தளிப்பாக இருந்தது ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள். சிறையிலிருந்து விடுதலையாகி இருந்தார்கள் உமா மகேஸ்வரன் கண்ணன் நிரஞ்சன் மூவரும். மாலையில் உமாமகேஸ்வரன் வந்து என்னை சந்தித்து டெல்லியில் நடந்த விபரங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்பு என்னை கூட்டிக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் எல் கணேசனை Gingee shirks blame - Telegraph Indiaசந்திக்கச் சென்றோம். அவர் பழைய எம்எல்ஏ ஹாஸ்டலில் தான் தங்கி இருந்தார். உமா அண்ணாஅவரிடம் நன்றி கூறி, பழைய நண்பரான செஞ்சி ராமச்சந்திரன் சந்தித்து பேசினார். செஞ்சி ராமச்சந்திரனுக்கு முன்னாள் விடுதலைப்புலிகள் யாரையும் பிரபாகரன், உமாமகேஸ்வரன் யாரையும் முகம் கொடுத்து பேசுவதற்கு விருப்பம் இல்லை.

பிற்காலத்தில் அவரை சந்தித்து பேசும்போது கூறினார் ஆரம்ப காலத்தில் தாங்கள் நல்ல உதவி செய்ததாகவும் இவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் கொலை செய்து கொண்டும் இருப்பது தாங்கள் எதிர்பார்க்காதது நிகழ்வு என்றும், தான் பிரபாகரனிடம் ஒற்றுமை பற்றி பேசும்போது பிரபாகரன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் வரும்போது பாலசிங்கம் தான் பிரபாகரனைக் குழப்பியது. இதெல்லாம் தங்களுக்கு மன வருத்தம் என்றும் கூறினார்

எல் கணேசன் அண்ணா கலைஞரை சந்தித்து நன்றி கூறி, இன்றுள்ள நிலைமையில் கலைஞரின் ஆலோசனையை பெறசொன்னார். உமா தனியா போய் கலைஞரை சந்தித்து உரையாடினார். கலைஞரை சந்தித்த செய்திபத்திரிகையில் வரவும். எம்ஜிஆருக்கு எரிச்சலைக் கொடுத்தது.

எம்ஜிஆர் எமக்கு ஆதரவான நிலையை எடுக்க காரணம் இந்திராகாந்தி அம்மையார் இலங்கைப் பிரச்சினையில் தீவிரமாக இறங்கி விட்டதுதான். இக்காலகட்டத்தில்தான் 83 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரமே இந்திய வெளிநாட்டு உளவுத்துறை RAW அதிகாரிகள் முதன்முறையாக களத்தில் இறக்கி விடப்பட்டு இயக்கத் தலைவர்களை ரகசியமாக சந்திக்கத் தொடங்கினார்கள்.

இப்போது மாதிரி அப்போது தொலைபேசி வசதிகள் இல்லாத காரணத்தால் தகவல் தொடர்புக்காக நல்ல ஒரு இடம் எங்களுக்கு தேவைப்பட்டது. உடனடியாக உமா அண்ணா என்னை கூட்டிக்கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மதிப்புக்குரிய பெரியவர் ராசாராம் அவர்களை போய் சந்தித்தோம். அவரும் எங்களை அன்போடு வரவேற்று உபசரித்தார்.

தன்னால் ஏதாவது உதவி வேண்டுமா எனக் கேட்ட பொழுது உமா அண்ணா பழைய சட்டமன்ற விடுதியில் (பழைய எம்எல்ஏ ஹாஸ்டல்) எமக்கு அலுவலகம் அமைக்க ஒரு அறை தர முடியுமா என கேட்டார். அவரும் உடனடியாக எமக்கு ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தார்.(சபாநாயகரின் கட்டுப்பாட்டில்தான் சட்டசபை உறுப்பினர் உறுதி எல்லாம் உள்ளன)

முதலாம் மாடியில் 84 நம்பர் ரூம் எமது இயக்கத்துக்காக ஒதுக்கி தரப்பட்டது.. எல்லா வசதிகளும் நமக்குத்தான் முதல் கிடைத்தது ஆனால் அதை கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு உடைத்து விட்டோம். வேறு எந்த ஒரு இயக்கத்துக்கும் ஒரு அரசு விடுதி கிடைக்கவில்லை.இனி நான் எழுதும் செய்திகள் வரிசை முன்பின்னாக இருக்கலாம் நினைவில் இல்லை நடந்த சம்பவங்கள் பதிய வேண்டிய தேவை உள்ளது.

எம்எல்ஏ விடுதி எமது அலுவலக அறையாக மாற்றப்பட்டது.அதன் முதல் பொறுப்பாளராக நான்நியமிக்கப்பட்டு, அங்கேயே தங்கியும் இருந்தேன்திருவல்லிக்கேணியில் இருந்த எமது இரகசிய இடத்தில் மாதவன் அண்ணா அங்குதான்தங்கி இருந்தார்முக்கிய ஆவணங்கள் அங்குதான் இருந்தன

இந்திய ரா அதிகாரிகள் தகவல் தொடர்பும் எம்எல்ஏ ஹாஸ்டல் அலுவலகம் ஊடாகவே நடந்தன. சீலிடப்பட்ட கவர்கள் ரகசியமாக என்னிடம் கொடுக்கப்படும் நான் அதை உமா அண்ணாவிடம் கொடுத்துவிடு வேன். உமா கொடுக்கும்கடிதங்கள் செய்திகளையும் ராஅதிகாரிகள் வரும்போது அவர்களிடம் கொடுத்து விடுவேன்.

மாதவன் அண்ணாவும் காலையில் வந்து விடுவார். அங்கு IB அதிகாரிகள் வந்து உமா அண்ணாவை சந்திப்பதோடு ,என்னோடு , மாதவன் அண்ணா ஓடும் நீண்ட நேரம் அந்த நேரம் இலங்கையில் நடக்கும் செய்திகளை கேட்டு. கொள்வார்கள். தமிழ்நாடு உளவுத்துறை கியூ பிராஞ்ச் அதிகாரி கள் எங்களை சந்திக்க வருபவர்களை விசாரிப்பதும் எங்களை முறைத்துப் பார்ப்பது மாறி இருப்பார்கள்.

பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் முதல் தளத்தில் பழ நெடுமாறன் ஐயாவின் கட்சி அலுவலகம் இருந்தது. நெடுமாறன் ஐயா எங்களைப் பார்த்து சிரித்தால் நாங்கள் சிரித்து விட்டு போய் விடுவோம். ஒரு நாளும் அவரோடு போய் கதைப்பதில்லை காரணம் அவர் பிரபாகரனுக்கு மதுரையில் உதவி செய்வதால். அந்த நேரம் நெடுமாறன் ஐயாவும் இலங்கை அரசுக்கு எதிராக படகில் இலங்கைக்குப் போய் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அதிரடி அறிவிப்பு செய்து, போராட போனபோது ராமேஸ்வரத்தில் என நினைக்கிறேன் அவர் போகும் படகை எம்ஜிஆர் அரசு பெரியஓட்டை போட்டு, படகு நகராத படிசெய்துவிட்டார்கள்.

நெடுமாறன் அய்யாவின் போராட்டத்தில் கலந்துகொள்ள சொல்லின் செல்வர் குமரி ஆனந்தன் போய் கலந்து கொண்டார். தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தமிழ்மணி சென்னையில் ஒரு பெரிய மாணவர் போராட்டத்தை நடத்தினார்.

இப்படியான போராட்டங்கள் தமிழ்நாடு எம்ஜிஆர் அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது, எம்ஜிஆர் விரும்பவில்லை. இந்தப் போராட்டங்களில் முன்னிலை நின்றவை, எம்ஜிஆர் அரசுக்கு எதிரான கட்சிகள் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம். கலைஞர் தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல்  பெரிய போராட்டத்தை அறிவித்தார்.

 

இரண்டு நாளில் அந்தப் போராட்டம் நடக்க விருந்தது. எம்ஜிஆர் ஆதரவு பத்திரிகையான சுதேசமித்திரன் என நினைக்கிறேன் அதன் ஆசிரியர் ஜெபமணி என்பவர் வந்து உமா மகேஸ்வரனை சந்தித்து சும்மா பேசிக் கொண்டிருந்தார்.

அவரது பத்திரிகை மாலை பத்திரிகை.அன்று மாலையில் சுதேசமித்திரன் பத்திரிகை தலைப்புச் செய்தி விடுதலைப்புலி உமா மகேஸ்வரன் கருணாநிதிக்கு கடும் கண்டனம். ரயில் மறியல் போராட்டம் தேவையற்றது. கருணாநிதி எமக்கு ஆக்கபூர்வமான வழியில் ஆதரவு தர வேண்டும், இச் செய்தி வந்தவுடன் எல் கனேசன் அண்ணாஎங்களை வரச் சொல்லி என்னப்பா உமா இப்படி பேட்டி கொடுத்திருக்கிறார்  என கடுமையாக கேட்டார்.

நாங்கள் இச்செய்திதவறு என்று கூறிவிட்டு, உமா அண்ணாவுக்குசெய்தி பற்றி அறிவித்தோம். உடனடியாக உமா அண்ணா வந்து எல். கணேசன்அண்ணாவையும் சந்தித்துவிட்டு,உடனடியாக என்னையும் கந்தசாமியும் கூட்டிக்கொண்டு கலைஞரிடம் நேரில் போய் இது பொய் செய்தி பத்திரிகை ஆசிரியர் என்னை வந்து சந்தித்தது உண்மை ஆனால் ரயில் மறியல் ஐ பற்றி இருவரும் பேசவில்லை. இந்தச் செய்தி வேணும் என்று போடப்பட்டது என்று கூறினார்.

கலைஞர் கருணாநிதி அமைதியாக எனக்கு தெரியும் இன்னும் எந்தெந்த வழிகளில் உங்களை சம்பந்தப்படுத்தி எனக்கு எதிராக செய்திகளை போடுவார்கள்.நாங்கள் நடத்தும் போராட்டங்களை நசுக்குவதற்கு எம்ஜிஆர் பல முறைகளை கையாண்டு வருகிறார் அதுவும் எனக்கு தெரியும். நீங்கள் மத்திய அரசு இப்போது எடுத்துள்ள புதிய ஆதரவு நிலையை விரைவாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனஆலோசனை கூறினார்.

உமா மகேஸ்வரனுக்கு மனம் ஆறவில்லை. வெளியில் வந்து சுதேசமித்திரன் ஆசிரியர் ஜெபமணியைச் சுடப் போகிறேன் என ஆவேசப்பட்டார். கந்தசாமியும் நானும் அவரை சமாதானப்படுத்தி கந்தசாமி தான் போய் பத்திரிகை ஆசிரியர் ஜெபமணி யை எச்சரிக்கை செய்து மறுப்பு செய்தி போட சொல்வதாககூறினார்.ராயப்பேட்டையில் இருந்த பத்திரிகை அலுவலகத்திற்குநானும் கந்தசாமியும் போனோம்.

ஆசிரியர் ஜெபமணி திமிராகப் பேசினார் கந்தசாமி கைத்துப்பாக்கியை எடுத்து மேசையில் வைத்துவிட்டு நாளை மாலை பத்திரிகையில் மறுப்பு செய்தி வராவிட்டால்நாளை இதே நேரம் வருவேன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் எச்சரிக்கை செய்துவிட்டு வந்தோம்.

அதே நேரம் மற்ற பத்திரிகை அலுவலகங்களுக்கும் போய் இச்செய்தியின் மறுப்பறிக்கை எமது கடிதத் தலைப்பில் கொடுத்தோம்.அடுத்தநாள் சுதேசமித்திரன் பத்திரிகையில் முன்பக்கத்தில் ஆனால் சிறிதாக மறுப்பறிக்கை கொடுத்து மன்னிப்பு கேட்டிருந்தார்.

திமுக நடத்திய ரயில் மறியல் போராட்டம் மிக வெற்றிகரமாக நடந்தது. மத்திய அரசு தமிழ்நாட்டில் அன்று ரயில்களை இயக்க வில்லை.

தொடரும் ………..


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.