உள்நாட்டில் தயாரிக்கபட்ட 7 கைதுப்பாக்கிகளுடன் 5 பேர் கைது.

அம்பாறை திருக்கோவில் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கபட்ட 7 கைதுப்பாக்கிகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று முன்னெடுக்கபட்ட சுற்றிவலைப்பின்போதே குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், துப்பாக்கி ரவைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

26, 29, 44 மற்றும் 48 வயதுகளை உடைய  திருக்கோவில் பிரதசத்தைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள நபர்களை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.