வெளிமாவட்ட வீதியோர வியாபாரிகளுக்கு தடை விதிப்பு.

கரைதுறைப்பற்று பிரதேச பிரிவில் வெளிமாவட்ட வீதியோர வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் வெளிமாவட்டத்தினை சேர்ந்த வீதியோர வியாரிகளின் வியாபார நடவடிக்கையினை தடைசெய்துள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா தெரிவித்துள்ளார்.

இன்று(26) நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் :

நாடுமுழுவதும் வேகமாக கொரோனா பரவிக்கொண்டிருக்கின்றது. கரைதுறைதுறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் நோய் தொற்று தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தொற்றினை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் படி வெளிமாவட்டங்களில் இருந்து வர்த்தக நோக்கத்துடனோ ஏனைய நோக்கத்துடனோ யாரும் வருவது தடைசெய்யப்படவேண்டும்.

முன்னர் கொரோனா பரவியபோது இருந்த முன்னாயத்தங்கள் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்லாததை அவதானிக்கமுடிகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பு இருந்த தடைகள் எதுவும் தற்போது இல்லை தனிய முகக்கவசங்கள் அணிய வலியுறுத்தப்படுகின்றது.

வெளிமாவட்டங்களில் வீதியோர வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வியாபாரம் செய்வதை தடைசெய்யப்பட்டுள்ளது.

வெளிமாவட்டத்தினை சேர்ந்த பலர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தலைமறைவாக இருக்கின்றார்கள் எனவே ஆபத்தான கொரோனா தொற்றில் இருந்து மக்கள் அனைவரையும் பாதுகாக்கவேண்டிய முன்னாயத்த வேலைகளை முன்னெடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.