காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இலங்கையின் ஆதரவை கோருகிறது இந்தியா !

காஷ்மீரில் பெஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்த இலங்கை உதவும் என்று இந்தியா நம்புகிறது.
ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிப்பது என்னவென்றால், இது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல, மாறாக தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை. இலங்கை என்பதற்காக மட்டுமல்லாமல், உலக நாடுகள் என்ற வகையில் இந்தியா இதை எதிர்பார்க்கிறது.
இதுவரை இலங்கை எந்த உதவியையும் இந்தியாவிற்கு கோரவில்லை என்றும், இந்த தாக்குதல் நடந்தவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தலைவர்களில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் ஒருவர் என்றும், இதற்காக இந்திய அரசு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.