இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிக்கலில்! மாற்று வழிகளை நாட வேண்டிய கட்டாயம்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் விமான மற்றும் கடல்சார் துறைகள் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் சரக்கு போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருமானமும் பாதிக்கப்படலாம்.

பாதுகாப்பு குறித்த அச்சம் மற்றும் பயணங்களில் ஏற்படக்கூடிய தடங்கல்கள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமானப் பாதைகளை மாற்ற வேண்டியிருக்கும். இதனால், நீண்ட தூர விமானப் பாதைகளை பயன்படுத்த வேண்டியது வரும். இது செலவுகளை அதிகரிக்கும்.

மேலும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சுமார் 20% இந்தியர்கள் என்பதால், இந்த சூழ்நிலை சுற்றுலாத் துறையையும் பாதிக்கக்கூடும்.

Leave A Reply

Your email address will not be published.