கொத்மலை பூண்டுலோயா அரோ தோட்டத்தில் கோவிட் தொற்று : 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

கொத்மலை பூண்டுலோயா அரோ தேயிலைத் தோட்டத்தில் கோவிட் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரிந்த இந்த நபரின் பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோயாளியின் அரோ தேயிலை தோட்டத்தில் வாழும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவரது நண்பர்கள் 10 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.