யாழ். பல்கலைக்கழகத்தில் “நினைவாயுதம்” கண்காட்சி.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப் படுகொலையை நினைவுகூரும் “நினைவாயுதம்” கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

தமிழினம் பட்ட அவலங்களையும், சோகங்களையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் முகமாக இந்தக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளை அழைத்து வந்து கண்காட்சியைக் காண்பித்து, தமிழினத்தின் அவலங்களைப் பெற்றோர் எடுத்து கூற வேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.