முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்குப் பிடியாணை!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவைக் கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே மஹிந்தானந்தவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.