பல் மருத்துவர் செய்த முடி மாற்று அறுவை சிகிச்சையில் இருவர் பலி – கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்

முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவரால் இருவர் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், கான்​பூரில் டாக்​டர் அனுஷ்கா திவாரி நடத்தி வந்த மருத்​து​வ​மனைக்கு இளம் பொறி​யாளர் இருவர் முடி மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

இவர்களில் ரூக்​கா​பாத்தை சேர்ந்த பொறி​யாளர் மயங்க் கட்​டி​யார் என்​பவர் கடந்த நவம்பர் 18-ம் திகதி அன்று டாக்​டர் அனுஷ்கா திவாரியிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் இவர் அடுத்த நாளே முகம் வீங்கி நவம்பர் 19-ம் திகதி உயிரிழந்தார்.

அதேபோல கான்​பூர் பவர் ஹவுஸ் பகு​தியை சேர்ந்த பொறி​யாளர் வினீத் துபே​வும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மார்ச் 15-ம் திகதி அன்று உயிரிழந்தார்.

இதனால் இருவரது குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், பொலிஸார் நடவடிக்கை எடுக்காததால் முதலமைச்சர் ஆதித்​ய​நாத்​தின் இணை​யதளத்​தில் புகார் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, வினீத் துபே​வின் மனைவி கொடுத்த புகார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அனுஷ்கா திவாரியிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பாதிக்கப்பட்ட வேறு சிலரும் புகார் கொடுத்தனர். இதனால் அவரது மருத்துவமனை முற்றுகையிடப்பட்டதால் அவர் தலைமறைவானார்.

இதுகுறித்து கல்​யான்​பூர் பகுதி காவல் துறை உதவி ஆணை​யர் அபிஷேக் பாண்டே கூறும்​போது, “முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த அனுஷ்கா திவாரி பல் மருத்துவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார். தற்போது தலைமறைவானவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.