குவைத் வான்வெளி மறு அறிவிப்பு வரும் வரை மூடல்!
குவைத் வான்வெளி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளாதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் கத்தார், அமீரகம் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளும் தங்களுடைய வான்வெளியை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளாத அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று மற்றும் அடுத்த நாட்களில் தாயகம் செல்ல திட்டமிடப்பட்ட அனைவரும் தங்கள் விமான பயணச்சீட்டு பெற்ற ஏஜென்சிகளிடம் விபரங்களை தெளிவாக அறிந்த பிறகு மட்டுமே விமான நிலையம் செல்லுங்கள். குவைத் மற்றும் மற்ற வளைகுடா நாடுகளில் வசிக்கின்ற அனைவரும் அரசு வெளியிடும் அறிவிப்புகளை பின்பற்றுங்கள். பாதுகாப்பாக இருங்கள், வெளியே செல்ல வேண்டாம்.
