குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக ஷானி அபேசேகர – பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் நியமனம்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருமதி இமேஷா முத்துமாலை கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.