கொரோனா சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாய் மகன் தற்கொலை!

விசேட தேவையுடைய மகனை வீட்டில் தனியே விட்டு கொரோனா சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாய்: மகன் தற்கொலை!

கொரோனா அறிகுறிகளுடன் தென்பட்ட பெண்ணொருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து, தனிமையிலிருந்த அவரது மாற்றுத்திறனாளியான மகன் தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது.
ஹோமாகமவில் இந்த துயர சம்பவம் நடந்தது.

நேற்று (31) காலை தனிமையிலிருந்த வீட்டில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.
25 வயதான மாற்றுத்திறனாளியான இளைஞன் தனது தாயுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் அவர் தனியாக தங்க வேண்டியிருந்தது.தாயார் அந்த பகுதி சுகாதார அதிகாரிகளால் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

நிலைமையைப் புரிந்து கொள்ளாததற்கும், அவரை தனது தாயிடமிருந்து பிரித்ததும் பொறுப்பற்ற நடவடிக்கையென அயலவர்கள் அதிகாரிகளை குற்றம் சாட்டினர்.

“தாயை அழைத்துச் சென்றபோது, ​​அவரது சிறப்புத் தேவை மகனையும் அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளிடம் சொன்னோம், ஏனென்றால் அவர் தனியாக இருப்பார். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. அந்த பெண்ணின் மகன் எப்படி உயிர்வாழ்வான் என்பதைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் தாயை அழைத்துச் சென்றார்கள் ”என்று அந்த பகுதி குடியிருப்பாளர் தெரிவித்தனர்.
“கொரோனா காரணமாக வீட்டின் அருகில் கூட செல்ல வேண்டாம் என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.

இன்று (31) அவரது தாயார் எங்களை தொலைபேசியில் அழைத்து அவரது நிலைமையை பற்றி சோதிக்க விரும்பினார்.

நாங்கள் கதவைத் திறந்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டோம் ”என்று பகுதி குடியிருப்பாளர் மேலும் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.