சிறைச்சாலையில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

வெலிக்கடை சிறைச்சாலையில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபப்ட்டுள்ளது.

இதில் ஐந்து கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் அடங்குவர். சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருந்தாளருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் தொடர்ந்து அதிகாரிகள் கைதிகளிடையே பி.சி.ஆர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

இதில் ஐந்து கைதிகளுக்கு தொற்று அறியப்பட்டுள்ளது. இவர்கள் பெண் கைதிகள் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.