திலீபனுக்கு நல்லூரில் இன்று ஆவணக் காட்சியகம் திறப்பு!
தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டுத் திலீபனின் வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் விதமாக இன்று சனிக்கிழமை மாலை ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
‘பார்த்தீபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!’ எனும் தொனிப்பொருளில், தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபிக்கு முன்பாக, மாவீரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இந்த ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
