யாழில் மூன்று கடைகளில் திருடர்கள் கைவரிசை.

யாழ்ப்பாணம்   கஸ்தூரியார் வீதியில் உள்ள 3 கடைகள் நேற்று (06) அதிகாலை வேளையில் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நகை கடை, துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையம் என்பவற்றுடன் ஓர் களஞ்சியமும் இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது

இரு கடைகளின் மேற்பகுதியை பிரித்து உள் இறங்கிய திருடர்கள் துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையத்தில் நேற்றைய விற்பனைப் பணம் வங்கியில் வைப்புச் செய்வதற்கு தயாராக இருந்த நிலையில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா திருடப்பட்டுள்ளது.

இதேபோன்று நகைக்கடையில் நகைகள் அயன்சேவ்வில் இருந்தமையினால் திருடப்படாத போதிலும் வெளியில் இருந்த கால்பவுண் நகையும் குபேரன் முன்பாக இருந்த ஒரு தொகை பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.