யாசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி– 81யாசகர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அனுராதபுரத்தில் யாசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி– 81யாசகர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அனுராதபுரத்தில் யாவகர் (பிச்சைக்காரர்) ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, நகரத்தில் உள்ள மற்ற யாசகர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பி.சி.ஆர். சோதனையின் போது கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட யாசகர் நேற்று அனுராதபுரத்தில் உள்ள புனித நகரத்திற்கு அருகில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள 81 யாசகர்கள் சுற்றிவளைத்த நகராட்சி அதிகாரிகள் அவர்களைத் தனிமைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.