கொரோனா சிகிச்சை நிலையம் கிளிநொச்சியில் நாளை திறப்பு

இலங்கையில் வேகமாக அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மாவட்டங்கள் ரீதியில் அமைக்கப்பட்டுவரும் வைத்தியசாலைகளில் கிளிநொச்சி மாவட்டத்துக்கான வைத்தியசாலை நாளை புதன்கிழமை (11) திறக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கிருஷ்ணபுரம் கிராமத்தில் குறித்த வைத்தியசாலை திறக்கப்படுகின்றது.

200 படுக்கைகளுடன் கூடிய வைத்தியசாலையின் ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன எனவும், நாளை (11) முற்பகல் 11 மணிக்கு செயற்பாட்டுப் பணிகள் தொடங்கும் எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்துக்கான கொரோனா சிகிச்சை வைத்தியசாலை மருதங்கேணியிலும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான கொரோனா சிகிச்சை வைத்தியசாலை மாங்குளத்திலும் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.