கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண்.

இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிக் கணக்காய்வாளராகப் பணியாற்றிய திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை இந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு நேற்றுமுன்தினம் அரசமைப்புப் பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.

இந்நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண், திருமதி ஜயரத்ன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றிய சூலந்த விக்கிரமரத்ன ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிக் கணக்காய்வாளரான திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவின் பெயரை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசமைப்புப் பேரவைக்குப் பரிந்துரை செய்திருந்தார்.

கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி ஜயரத்ன, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலை (சிறப்பு) பட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் அரச நிதி கணக்காளர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.