வயலில் வேலை செய்த குடும்பப் பெண் காட்டு யானை தாக்கி பரிதாப மரணம்!

காட்டு யானையின் தாக்குதலால் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை மாவட்டத்தின் மெதிரிகிரியை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வயலில் கூலி வேலை செய்து கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கியதில் மேற்படி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று பிள்ளைகளின் தாயாரான 45 வயதுடைய பெண்ணே காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.