இலங்கையில் கொரோனா மரணம் 46ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா மரணம் 46ஆக உயர்வு!

இலங்கையில் 46ஆவது கொரோனா சாவு பதிவாகியுள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயது ஆண், மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் (அபேக்‌ஷா) சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் இறப்பைத் தொடர்ந்து மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவரது இறப்புக்கான காரணம், இரத்தப் புற்றுநோய்நிலை உச்சமடைவு மற்றும் சுவாசத் தொகுதியில் ஏற்பட்ட பிரச்சினை ஆகிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த சாவு கொரோனா காரணமான இறப்பு எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.