டிராம் தடம் புரண்டதில் 2 பேர் உயிரிழந்தனர் 39 பேர் காயமடைந்தனர்.

இத்தாலியின் மிலன் (Milan) நகரில் நேற்று, பெப்ரவரி 27, 2026 அன்று மிலானின் போர்டா வெனிசியா (Porta Venezia) பகுதியில் மதியம் சுமார் 4:00 மணியளவில், தடம் எண் 9-இல் (Line 9) சென்ற டிராம் தடம் புரண்டு அருகில் இருந்த கட்டிடத்தின் கடைக்குள் புகுந்தது.

இந்த கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பாதசாரி என்றும், மற்றொருவர் டிராமில் பயணித்தவர் என்றும் மிலன் மேயர் பெப்பே சாலா (Beppe Sala) உறுதிப்படுத்தியுள்ளார்.சுமார் 39 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையின்படி, டிராம் ஓட்டுநர் தடம் மாற்றுவதற்கான சுவிட்சை இயக்கத் தவறியதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது. ஓட்டுநர் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். இருப்பினும், விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.