மேல் மாகாணத்துக்கான பொதுப்போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தம்.

மேல் மாகாணத்துக்கான பொதுப்போக்குவரத்துச் சேவைகளும்
15ஆம் திகதி நள்ளிரவு வரை முடக்கம்

பயணிகள் பஸ்கள் மேல் மாகாணத்துக்குள் நுழைவதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் இன்று (11) நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 15ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் ஸ்ரீலங்கா போக்குவரத்து சபையும் இதனை அறிவித்துள்ளன.

மாகாணங்களுக்கிடையிலான பஸ்கள் மாகாண எல்லை வரை இயங்கும் எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், மேல் மாகாணத்துக்குள் வழமை போல் பஸ் சேவைகள் இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 15ஆம் திகதி நள்ளிரவு வரை மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணத்துக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.