யாழ்ப்பாணம் ஆலயங்களில் இடம்பெறும் தீபாவளி வழிபாடுகளில் ஒன்றுகூடாதீர்கள்.யாழ் அரச அதிபர்

யாழ்ப்பாணம் ஆலயங்களில் இடம்பெறும் தீபாவளி வழிபாடுகளில் ஒன்றுகூடாதீர்கள்.

மக்களிடம் அரச அதிபர் மகேசன் வேண்டுகோள்

யாழ்ப்பாணம் மாவட்ட ஆலயங்களில் தீபாவளிப் பூஜை வழிபாடுகளில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூடாதீர்கள் என மாவட்ட அரச அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் இன்று வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்ததாவது:-

“இந்துக்களின் பண்டிகையாகிய தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஆலயங்களில் பூஜை வழிபாடுகளும் இடம்பெறும். அத்தோடு தற்போது இந்துக் கோயில்களில் விரத பூஜைகளும்  இடம்பெற்று வருவதால் பொதுமக்கள் கோயிலுக்குச் சென்று ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே இந்து கலாச்சார திணைக்களத்தினரால் ஆலயங்களுக்குள் 5  பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியைக் கொண்டாட வேண்டும். அத்துடன் ஆலயங்களுக்குச் செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனாத் தொற்றிலிருந்து விடுபட வேண்டி இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்.

குறிப்பாக வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினரால் ஏற்கனவே ஆலயங்களுக்குரிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆலயங்களுக்குச் சென்று ஒன்றுகூடுவதைத்  தவிர்த்து வீடுகளிலிருந்து அமைதியான முறையில் இவ்வருட  தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.