நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்! – புனே அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு

மும்பை – சோலாப்பூர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது.

மும்பை – சோலாப்பூர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், புனே ரயில் நிலையத்திற்கு முன்பு தடம் புரண்டது. இதில், ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்ட நிலையில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா ரயில் நிலையத்திலிருந்து சோலாப்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் நேற்று (ஏப்ரல் 27) இரவு 7.30 மணியளவில் தடம் புரண்டது.

டைமண்ட் கிராசிங் எனப்படும் பகுதியில் வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் ஒரு பெட்டியின் சக்கரங்களில் ஒன்று மட்டும் தடம் புரண்டதாகவும், அது தற்போது மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

புனே ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்த ரயில்வே கிராசிங் மேம்படுத்தப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.