மருதங்கேணிக் கல்விக் கோட்டத்தில் ஆழியவளை மாணவி தீபிகா சாதனை.

மருதங்கேணிக் கல்விக் கோட்டத்தில்
ஆழியவளை மாணவி தீபிகா சாதனை

இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணிக் கல்விக் கோட்டத்தில் ஆழியவளை சி.சி. தமிழ்க் கலவன் பாடசாலையில் தோற்றிய மாணவி பாலகுமார் தீபிகா 191 புள்ளிகளைப் பெற்று அக்கோட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

கஷ்டப் பிரதேசத்திலுள்ள இப்பாடசாலையிலிருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 24 மாணவர்களில் 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளைத் தாண்டி சித்தியடைந்துள்ளார்கள்.

இதேவேளை, உடுத்துறை ஆரம்பப் பிரிவு பாடசாலையில் 7 மாணவர்களும், கேவில் அ.த.க. பாடசாலையில் 3 மாணவர்களும், கட்டைக்காடு றோ.க. தமிழ்க் கலவன் பாடசாலையில் 2 மாணவர்களும், வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், மாமுனை அ.த.க. பாடசாலையில் 2 மாணவர்களும், நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், குடத்தனை கரையூர் றோ.க. தமிழ்க் கலவன் பாடசாலையில் 2 மாணவர்களும், செம்பியன்பற்று அ.த.க. பாடசாலையில் ஒரு மாணவருமாக மருதங்கேணிக் கல்விக் கோட்டத்தில் 29 மாணவர்கள் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.