துறைமுக அதிகார சபையின் பணி அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு அதிவிசேட வர்த்தமானி வெளியிட்டார் கோட்டா.

துறைமுக அதிகார சபையின் பணி
அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு
அதிவிசேட வர்த்தமானி வெளியிட்டார் கோட்டா

இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிகள் அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று மூலம் இந்த அறிவித்தலை அவர் வெளியிட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டு 61ஆம் இலக்க அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அவசியமான சேவைகளில் ஒன்றாகத் துறைமுக அதிகார சபையின் பணியை அறிவிப்பதாக ஜனாதிபதி வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.