மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்தவிர நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களே பாடசாலை வரவேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மாகாணவர்கள் வெளியிடங்களில் உள்ள பாடசாலைகளுக்கு செல்லமுடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.