இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல்: நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் ஹரியானா முதல்வர் மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் (Jind) ரயில் நிலையத்திலிருந்து சோனிபட் (Sonipat) வரை இயக்கப்படும் இந்த பசுமை ரயில், கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்கும் நோக்கில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

டீசல் ரயில்களுக்கு மாற்றாக அறிமுகமாகியுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில், ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் (Hydrogen Fuel Cells) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து இயங்குகிறது. இதன் இயக்கத்தின் போது நீரும் நீராவியும் மட்டுமே வெளியேறுவதால், காற்று மாசு ஏற்படாது.

ஹைட்ரஜன் ரயிலின் முக்கிய அம்சங்கள்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாக இந்த ஹைட்ரஜன் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜிய மாசு: இந்த ரயில் இயங்கும்போது நச்சுப் புகை அல்லது கார்பன் உமிழ்வு எதுவும் ஏற்படாது.

வெளியேறும் ஒரே கழிவு நீரும் நீராவியும் மட்டுமே. நவீன தொழில்நுட்பம்: ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் ரயிலுக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, அதன்மூலம் இன்ஜின் இயக்கப்படுகிறது.

வேகம் மற்றும் வசதிகள்: 10 பெட்டிகளைக் கொண்ட இந்த நவீன ரயில் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றுள்ளது.

இந்த ரயிலின் முதல் பயணத்தில் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு பயணம் செய்தனர். இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இது முக்கியமான அடுத்த கட்டமாகக் கருதப்படுகிறது.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு வழித்தடங்களிலும் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.