வரலாற்றிலேயே முதல்முறை: ரூ.30 கோடி முதல் பரிசுடன் கேரள ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை தொடக்கம்!

திருவனந்தபுரம்: ரூ.30 கோடி முதல் பரிசு கொண்ட ஓணம் பம்பர் லாட்​டரியை கேரள முதல்​வர் வி.டி.சதீசன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்​தார்.

இது குறித்து முதல்​வர் வி.டி.சதீசன் தனது முகநூல் பதி​வில், “லாட்டரி வரலாற்​றில் மிக அதிக முதல் பரிசு இது​வாகும். இந்த லாட்​டரி சீட்​டு​கள் ஜூலை 20 முதல் விற்​பனைக்கு கிடைக்​கும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

கடந்த ஆண்டு ஓணம் பம்​பர் லாட்​டரி​யில் முதல் பரி​சாக ரூ.25 கோடி வழங்​கப்​பட்​டது. இது இந்த ஆண்டு ரூ.30 கோடி​யாக அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது. இரண்​டாவது பரி​சாக 20 பேருக்கு தலா ரூ.1 கோடி​யும் வழங்​கப்பட உள்​ளது. லாட்​டரி சீட்​டின் விலை ரூ.500 செப்​டம்​பர் 26ல் குலுக்​கல்​ நடை​பெறும்​.

Leave A Reply

Your email address will not be published.