நாளை நடைபெறவுள்ளது புலமைப்பரிசில் பரீட்சை.
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2 ஆயிரத்து 723 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 89 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
