மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (20) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அ .ஸ்ரான்லி டி மெல் அவர்கள் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் S.குணபாலன் மற்றும் மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளக கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், சமூர்த்தி பணிப்பாளர், அனைத்து திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.