விகாரையில் துப்பாக்கிச்சூடு! பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!!
இராஜகிரிய ஸ்ரீ சத்தர்மராஜிக விகாரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மேற்படி அதிகாரி நேற்று (20) தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
