இளம் ஊடகவியலாளர் திடீர் சுகயீனம் காரணமாக மரணம்.

இளம்  ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேல் இன்று காலை (21) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக வீட்டில் வைத்தே அவர் காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கண்டி, புஸல்லாவை பிறப்பிடமாகக்கொண்ட சந்திரமதி, புஸல்லாவை இந்து தேசியக் கல்லூரியில் உயர்தரம் வரையிலும் பட்டப்படிப்பை இந்தியாவிலும் நிறைவுசெய்துள்ளார்.

தினக்குரல் பத்திரிகை ஊடாக தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த அவர், கடந்த 4 வருடங்களாக நியூஸ்பெஸ்ட் ஊடக நிறுவனத்தில் பணியாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.