கிளிநொச்சியில் மேலும் இருவருக்கு கொரணா தொற்று.

கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திருவையாறு பகுதியில் மரணமடைந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு பகுதியில் இருந்து வருகை தந்திருந்த குறித்த நபரின் மகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பரிசோதனையில் தொற்றுஉறுதி செய்யப்பட்டது.

கண்டாவளை பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்து தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

இதேவேளை வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.