அனைத்து எதிர்க்கட்சிகளும் பொதுவான கட்டமைப்பின் கீழ் செயற்பட வேண்டும்! – ரணில் கோரிக்கை.
ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு நாளாந்த வாழ்க்கையை நடத்துவது மிகவும் கடினமானதாக மாறியுள்ளது.
ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒரு பொதுவான உடன்பாட்டுக்கு வருவதற்கான பேச்சுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.” – என்றார்.
