அகத்திமுறிப்பு குளத்தின் கீழ் செயல்படும் பெரும்போக நெற்செய்கை தொடர்பான கூட்டம்.

மன்னார் மாவட்ட அகத்திமுறிப்பு குளத்தின் கீழ் செயல்படும் கிராமங்களுக்கான பெரும்போக நெற்செய்கை தொடர்பான கூட்டம் இன்று முசலி பிரதேச செயலாளர் தலைமையில் முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர், விவசாய நீர்ப்பாசன பொறியியலாளர், கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி இணைப்பாளர், கிராமசேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெரும்பாக உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், அகத்திமுறிப்புக்குளத்தின் கீழுள்ள கிராமங்களின் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.