அலரிமாளிகைக்கு பிரதமர் மஹிந்த செல்வதில்லை : உண்மையை வௌியிட்ட பசில்!

அலரிமாளிகை முடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ தகவல் வௌியிட்டுள்ளார்.

ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், அலரி மாளிகை முற்றாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு கூட அங்கு சென்று பணியாற்ற முடியாதுள்ளதகவும் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகை முடக்கப்படவில்லை எனப் பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் பொய்யானது என பசில் ராஜபக்ஷ  கடும் சீற்றத்துடன் கூறியுள்ளார.

அலரி மாளிகை முடக்கப்படவில்லை என்று பிரதமரின் ஊடக செயலாளர் சொன்னது முற்றிலும் பொய். அலரி மாளிகை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. என்னால் அங்குள்ள அலுவலகங்களைப் பயன்படுத்த முடியவில்லை. உண்மையை அறிய விரும்பினால் நீங்கள் யாரையாவது அனுப்பிப் பார்க்கலாம். அந்தப் பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். பிரதமரின் ஊடக செயலாளருக்கு தான் என்ன செய்கின்றேன் என்பது தெரியாது உண்மைக்கு மாறான விடயங்களை தெரிவிப்பதன் மூலம் பிரதமரின் பெயருக்குக் களங்கத்தையும் அவருக்கு தர்மசங்கடமான நிலையையும் ஏற்படுத்துகின்றார்.

என்னைப் பற்றியும் பிரதமரின் செயலாளர் பிழையான விடயங்களைத் தெரிவித்துள்ளார். பிரதமர் எதனையும் மறைக்க விரும்புபவரில்லை . அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையானவர். முகத்துக்கு நேரே பேசுபவர்.

நாங்கள் வெளிப்படையானவர்களாக மக்களிடமிருந்து உண்மைகளை மறைக்காதவர்களாக இருக்க வேண்டும். உண்மையை மறைப்பதால் என்ன பயன்? பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூட முடக்கலின் பின்னர் அலரிமாளிகைக்குச் செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.