கல்ஹின்னை அல் மனார் தேசிய கல்லூரி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.

கல்ஹின்னை அல் மனார் தேசிய கல்லூரி இன்று முதல் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளது.

பூஜாப்பிட்டிய சுகாதாரப் வைத்திய அதிகாரப் பிரிவிலுள்ள கல்ஹின்னை அல் மனார் தேசிய கல்லூரி இன்று  30 -11-2020 மூடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர்  அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

கல்ஹின்னை பிரதேசத்தில் ஜும்ஆ மஸ்ஜித் வீதி,  கட்டாப்பு போன்ற பகுதிகளில் மூன்று  கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பூஜாப்பிட்டிய , அங்கும்புர சுகாதார வைத்திய அதிகாரிகள்,  கட்டுகஸ்தோட்டை கல்வி வலயப் பணிப்பாளர்,  மற்றும் பூஜாப்பிட்டிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர்களுடைய ஆலோசனைகளுக்கு அமைய பாடசாலை மாணவர் மாணவிகளின் பாதுகாப்பு நலன்கருதி பாடசாலையை மூடுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.