ராகம வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கைதி மடக்கிப்பிடிப்பு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர், வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார்.

குறித்த கைதி நேற்றிரவு 9 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார் என்று ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்தார்.

இவ்வாறு தப்பியோடிய கைதி, ஒருகொடவத்தை பகுதியில் வைத்து பொலிஸார் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டார்.

மஹர சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட அமைதியின்மையால், 11 கைதிகள் உயிரிழந்திருந்தனர். அத்துடன், 2 அதிகாரிகள் அடங்களாக 117 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.