பருத்தித்துறையில் ஒருவர் கொரோனாவுக்கு இலக்கு!

பருத்தித்துறையில் ஒருவர்
கொரோனாவுக்கு இலக்கு!
கொழும்பு சென்று வந்திருந்தவர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பரிசோதனைக் கூடத்தில் இன்று 336 மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்றைய முடிவுகளில் கொரோனாத் தொற்று உறுதியானவர் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர். தன்னுடைய மாமியாரின் மருத்துவத் தேவைக்காக கொழும்பு சென்று திரும்பியவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அந்தவகையில் தனிமைப்படுத்தல் நிறைவடையும் நிலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.