நந்திக் கடல் நீர் கடலுடன் சங்கமம்.

நந்திக் கடல் நீர் கடலுடன் சங்கமம்.

நந்திக் கடல் நீர் கடலுடன் இணையும் வகையில் வெட்டி விடப்படும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கனமழை  காரணமாக நந்திக்கடல் நிறைந்து வருகின்றது. அதனால் வட்டுவாகல் பாலத்தில் நீர் தேங்கி வருவதுடன் வயல் நிலங்கள் பலவும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது நந்திக்கடல், கடலுடன் சங்கமிக்கும் இடத்துக்கு அண்மையில் குறித்த நந்திக்கடல் நீரை கடலுக்குள் அனுப்பும் வகையில் நீரைக் கடலுக்குள் வெட்டி விடும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.