மொறட்டுவை விபத்தில் காயமடைந்திருந்த கர்ப்பிணித் தாயும் உயிரிழப்பு!

மொறட்டுவை விபத்தில் காயமடைந்திருந்த கர்ப்பிணித் தாயும் உயிரிழப்பு!

மொறட்டுவை பகுதியில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்த விபத்தில், பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த கர்ப்பிணித் தாயும் உயிரிழந்துள்ளார்.

மொறட்டுவை எகொடஉயன பகுதியில், நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி மற்றும் ஒரு வயதுக் குழந்தையும் உயிரிழந்தது.

இந்த நிலையில், குறித்த விபத்தில் காயமடைந்த தாயும், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே, குறித்த தாயும் சிகிச்சை பலனின்றி, இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பணித் தாய் ஒருவர், 7 வயது மற்றும் ஒரு வயதான தனது குழந்தைகளுடன், பாதசாரிக் கடவையூடாக, வீதியை கடக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில்,

மோட்டார் சைக்கிலொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தனர்.

இதன்படி, விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இரவு வேளையில், குறித்த பகுதியில் மோட்டார் சைக்கில் பந்தயம் நடத்தப்படுவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.