மன்னார் காற்றாலை மின் நிலையம் நாளை திறப்பு.

மன்னார் காற்றாலை மின் நிலையம்
நாளை திறப்பு

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் நாளை திறக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மீள் புதுப்பிக்கத்தக்க வலு சக்தியின் பால் இலங்கை கவனம் செலுத்தியிருப்பது வெற்றி எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

காற்றாலை மின் உற்பத்தியானது சுற்றாடல் நேயமிக்கது எனவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.