மூன்றாவது அலை விசாரணைகளில் ஈடுபட்ட புலனாய்வு அதிகாரிகள் 90 பேருக்கு தொற்று

“இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வந்த 90 புலனாய்வு அதிகாரிகள் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.”

– இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா மூன்றாவது அலை உருவானமை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க சபையில் இன்று எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாவின் மூன்றாவது அலையின் கொத்தணிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸ் குற்றவியல் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளுக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் 70 அதிகாரிகளுக்கும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் 20 அதிகாரிகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு வழங்கிய ஆலோசனைகளுக்கு ஏற்பவே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை நிறுவனத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டது எவ்வாறு என்று இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இது தொடர்பாக, 100 இற்கும் மேற்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.