இலங்கையில் மேலும் 703 பேருக்குக் கொரோனா உறுதி!

இலங்கையில் மேலும் 703 பேருக்குக் கொரோனா உறுதி!

இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மேலும் 703 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

மூன்றாவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட, சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 25 ஆயிரத்து 25  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 20 ஆயிரத்து 804 பேர் குணமடைந்துள்ளனர். 7 ஆயிரத்து 634 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 142 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.