முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் மு. உமாசங்கர் பதவியேற்றார்.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி மு. உமாசங்கர் அவர்கள் நேற்று (07) தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார் .

இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிர்வாகத்துறையில் பட்டமேற்படிப்பு நிர்வாகக் கலாநிதி (M.D. – Medical Administration) கற்கை நெறியை பூர்த்தி செய்து தற்போது வெளிநாட்டு மேற்படிப்பை சிங்கப்பூரில் முடித்து கொண்டு கடந்த மாதம் மீண்டும் நாடு திரும்பியிருந்தார்.

தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மருத்துவ நிர்வாகியாக மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பொறுப்பேற்கும் படி இன்று 07ம் திகதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் அவர்களினால் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் இன்றையதினம் வைத்தியகலாநிதி மு.உமாசங்கர் அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.