என் உயிர் உள்ள வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது! ஆனந்தசங்கரி

என் உயிர் உள்ள வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது!

இப்படிக் கூறுகின்றார் ஆனந்தசங்கரி

“நான் உயிரோடு இருக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சியுடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் இணையாது.”

இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரே வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமானவர்கள்.

அவர்கள் நினைத்திருந்தால் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரை நிறுத்தி இருக்கலாம். ஆனால், போரை நிறுத்த அவர்கள் விரும்பவில்லை.

இவர்கள் இருவரும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை அனுபவித்தவர்கள். இந்தநிலையில், அவர்களின் தலைமையைக் கொண்ட தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தக் காலத்திலும் இணைவதற்கு அனுமதிக்கமாட்டேன்.

ஆனால், இணைப்பதற்கு அவர்கள் தற்போது மேற்கொள்ளும் முயற்சி ஒருபோதும் கைகூடாது. இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் தங்களுடைய பதவிகளைத் துறக்க வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்களுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளார்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.