புதுக்காட்டுச் சந்தியில் கோரவிபத்து. ஒருவர் பலி.

பளை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் வண்ணாங்கேணி பளையைச் சேர்ந்த கிருஸ்ணன் நவநீதன் என்பவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது யாழ் நோக்கி வருகை தந்த டிப்பர் புதுகாட்டுச்சந்தியிலுள்ள காபட் நிறுவனத்துக்கு திரும்பிய வேளை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவமானது 9.15மணியளவில் இடம்பெற்றுளதாக தெரியவருகிறது.

சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.