சிறையிலுள்ள மரணதண்டனை கைதி வாஸ் குணவர்தனவுக்கும் கொரோனா.

சிறையிலுள்ள மரணதண்டனை கைதி வாஸ் குணவர்தனவுக்கும் கொரோனா.

கொலைச் சம்பவமொன்றில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரபல தொழில் அதிபர் மொஹமட் சியாம் கொலைச் சம்பவத்தில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு 2015ஆம் உயர்நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

கொரோனாத் தொற்றுக்குள்ளான அவரை வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், வாஸ் குணவர்தனவுக்கு எதிராகச் சோடிக்கப்பட்ட ஆதாரங்களைத் தயார் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.